இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்

இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்

இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும்.
1950 மார்ச் 15-ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதனை பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். இந்த அமைப்பின் முதல் தலைவர் ஜவகர்லால் நேரு ஆவார்.
முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951-ல் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாகிஸ்தானின் போரால் 1965ல்
தடைபட்டது. அடுத்த இரண்டாண்டுகள் வரட்சியும், நாணய மதிப்பிழப்பும், விலையேற்றமும், வளம் குன்றலும் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இடையூராகயிருந்தது. அடுத்து மூன்று ஆண்டுத் திட்டங்கள் 1966 முதல் 1969 வரை போடப்பட்டு, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969ல் தொடங்கப்பட்டது.
1990-91ல் நிலையில்லாத, அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த மத்திய அரசியலால் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1990-ல் தொடங்கப்படவில்லை. அதனால், 1990-91 மற்றும் 1991-92 ஆண்டுகளை ஆண்டுத் திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 1992ல் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல் எட்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் பொதுத்
துறையில் கவனம் செலுத்தப்பட்டு அடிப்படை மற்றும் கனரக தொழிலில் முதலீடு செய்யப்பட்டது ஆனால் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து பொதுத் துறையில் கவனம் குறைக்கப்பட்டு, தற்போது பொதுவான தேசிய வளர்ச்சியை நோக்கித் திட்டமிடப்படுகிறது.
அமைப்பு:
திட்டக்குழுவின் தலைவராக நாட்டின் பிரதமரும், நியமன அடிப்படையில் மத்திய அமைச்சருக்கு நிகரான அதிகாரத்தில் துணைத் தலைவரும், இதர துறை சார்ந்த நிரந்தர உறுப்பினர்களும் மற்றும் பகுதிநேர உறுப்பினர்களும் இதன் அங்கத்தினர்கள்.
பொருளாதாரம், தொழிற்துறை, அறிவியல் மற்றும் பொது நிர்வாக வல்லுநர்களே நிரந்தர உறுப்பினர்களாகவும், முக்கிய அமைச்சகத்தின் அமைச்சர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள். இதன் மூல நிறுவனம் இந்திய நிதி அமைச்சகம் ஆகும்.

இந்திய பொருளாதார திட்டமிடுதலின் வரலாறு

பொருளாதார திட்டமிடுதலை முதன் முதலில் கூறிய அறிஞர் – விஸ்வேஸ்வரய்யா
தேசிய திட்ட கமிஷன் 1938 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது.
1934 – ஆம் ஆண்டு இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர்- விஸ்வேஸ்வரய்யா.
1944 – ஆம் ஆண்டு தேசிய திட்டமிடலில் முதன் முயற்சியாக  8 முன்னணி தொழில் அதிபர்களால் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்ற நாடு முழுமைக்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அதுவே பம்பாய் திட்டம் எனப்பட்டது.
1945 – காந்திய திட்டம் – ஸ்ரீமன் நாராயணன்
1950 – மக்கள் திட்டம் – M.N. ராய்
தேசிய திட்டக் குழு:

தேசிய திட்டக்குழு மார்ச் 15, 1950 இல் தொடங்கப்பட்டது.
திட்டக் குழுவின் முதல் தலைவர் – ஜவஹர்லால் நேரு.
திட்டக்குழுவின் முதல் துணைத் தலைவர் – குல்சாரிலால் நந்தா.
திட்டக் குழுவின் உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
திட்டகுழு அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு.
திட்டக் குழுவின் நோக்கம்:

நாட்டின் பொருளாதாரம் மூலதனம் மனிதவளம் ஆகியவற்றை மதிப்பிடு செய்தல்.
செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு செய்தல்.
விவசாயம், தொழில்துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற துறைகளில் வேகமான வளர்ச்சி.
சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்குதல்.
தேசிய வளர்ச்சிக் குழு:

தேசிய வளரச்சிக் குழு 15.08.1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தேசிய வளர்ச்சிக் குழு ஒரு சட்டப்பூர்வ அமைப்பு.
தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் – மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள்.
தேசிய வளர்ச்சி குழுவின் முக்கியப் பணி:

         ஐந்தாண்டு திட்டத்திற்கு இறுதி அங்கீகாரம் அளித்தல்.
மாநில திட்டக் குழு:

மாநில திட்டக்குழுவின் தலைவர் மாநில முதல்வர்.
மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்கள் மாநில நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர்கள்.
ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் காண 1928 ஆம் ஆண்டிலேயே முயன்ற முதல் நாடு சோவியத் ரஷ்யா.
1.முதல் ஐந்தாண்டுத் திட்டம்: 1951 – 1956

முதல் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் – ஹரோல்டு தோமர்
முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயத்துறை.
சமூக முன்னேற்ற திட்டம் 1952-ல் தொடங்கப்பட்டது.
வேளாண்மை தவிர நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, போக்குவரத்து தொழில் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட முக்கிய அணைகள்:

  தாமோதர் அணை, ஹிராகுட் எணை, பக்ராநங்கல் அணை, கோசி அணை, சாம்பல் அணை, நாகார்ஜூனா அணை, மயூராக்ஸி அணை போன்றவை.
2.இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1956 – 1961

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் P.G.மஹல நாபிஸ்.
முக்கியத்துவம் தரப்பட்ட துறை தொழில் துறை.
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட முக்கிய கனரக தொழிற்சாலைகள்:

ரஷ்யா உதவியுடன் பிலாய் கனரக தொழிற்சாலை.
பிரிட்டன் உதவியுடன் துர்காபூர் கனரக தொழிற்சாலை.
ஜெர்மனி உதவியுடன் ரூர்கேலா கனரக தொழிற்சாலை.
தசம முறையில் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அணுசக்தி ஆணையம் ஹோமிபாபா தலைமையில் அமைக்கப்பட்டது.
3மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்: 1961 – 1956

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் – P.G.மஹல நாபிஸ்.
மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் தற்சார்பு திட்டமாகும்.
பணமதிப்பு 36 சதவிகிதம் உயர்தல்
சீனர் படையெடுப்பு, பாகிஸ்தான் போர், பஞ்சம் போன்ற காரணங்களால் மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் படுதோல்வி அடைந்தது.
ஆண்டுத் திட்டம்: 1966 – 1969

இது திட்ட விடுமுறை காலமாகும்
இக் காலக்கட்டத்தில் புசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
முக்கியத்துவம் தரப்பட்ட துறை, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் துறை.
4.நான்காம் ஐந்தாண்டு திட்டம்: 1969 – 1974

நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள், நிலையான வளர்ச்சி மற்றும் தன்னிறவை.
பாகிஸ்தான் போருக்குப் பின், பங்காளதேஷ் அகதிகள் வருகை, பணவீக்கம் உயர்தல் போன்ற காரணத்தால் நான்காம் ஐந்தாண்டு திட்டம் தோல்வி அடைந்தது.
5.ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: 1974 – 1979

ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் மறுபெயர் குறைந்தபட்ச தேவை திட்டம்.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள் வறுமையை ஒழித்தல்.
ஒர் ஆண்டுக்கு முன்பே நிறுத்திக் கொள்ளப்பட்ட திட்டமாகும்.
இந்திராகாந்தி அவர்களால் இருபது அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கரிபீ ஹட்டாவோ என்ற வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஊரக வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுழற்சி திட்டம்: 1978 – 1980

இது ஜனதா அரசு திட்டமாகும்.
முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயம்  அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு அளித்தல்.
குடிசை மற்றும் சிறுதொழிலை மேம்படுத்துதல்.குறைந்தபட்ச வருமானம் பெருபவர்களைக் குறைந்தபட்ச தேவை அடைய வைக்கவும் முக்கியத்துவம் தரப்பட்டது.
6.ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: 1980 – 1985

ஆறாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதன் மூலம் வறுமையை அகற்றுதல்.
குறைந்தபட்ச தேவை திட்டமும், ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டமும் கொண்டுவரப்பட்டன.
7.ஏழாவது ஐந்தாண்டு திட்டம்: 1985 – 1990

          ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
          உணவு, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன, தற்சார்பு ஆகியவை பெருகுதல்.
          ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்திய முக்கிய திட்டங்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு திட்டத்தையும் இணைத்து ஜவஹர் ரோஜ்கர் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
          வேலைக்கு உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
          முதன் முதலில் தனியார் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
ஆண்டுத் திட்டம்: 1990 -1992

இந்த ஆண்டு திட்டத்தில் சமூக மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்.
இந்த ஆண்டு திட்டத்தில் இந்தியா உலக சந்தையில் நுழையத் தொடங்கியது.
8.எட்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1992 – 1997

          எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்:
          முழு வேலைவாய்ப்பு, தொடக்கக்கல்வி, மனிதவளமேம்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, வேகமான பொருளாதார வளர்ச்சி.
          புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டது.
          பிரதம மந்திரி ரோஜ்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
9.ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: 1997 – 2002

          ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்.
          வேளாண்மை, கிராம வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் 2004க்குள் முழு கல்வி.
          ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய கொள்கை வளர்ச்சியுடன் கூடிய சமநிதி மற்றும் சமத்துவம்.
          ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய சுதந்திர பொன்விழா கொண்டாடியது. சர்வ சிக்க்ஷ அபியான் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
10.பத்தாம் ஐந்தாண்டு திட்டம்: 2002 – 2007

          பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்:
          நேரடி அந்நிய முதலீடு, தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கிராம வளர்ச்சி.
          தலா வருமானம் பத்து ஆண்டுக்குள் இரண்டு மடங்கு அதிகரித்தல்.
          கல்வி அறிவு 75 சதவிகிதம் அதிகரித்தல்.
          2011க்குள் மக்கள் தொகை வளர்ச்சி 16 சதவிகிதம் குறைத்தல்.
11.பதினோராவது ஐந்தாண்டு திட்டம்: 2007 – 2012

மொத்த உள் நாட்டு உற்பத்தி 8 முதல் 10 சதவிகிதம் அதிகரித்தல்.
வேளாண்மை உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவிகிதம் அதிகரித்தல்.
70 மில்லியன் புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல்
வறுமையை 10 சதவிகிதம் குறைத்தல்.
கல்வி:

ஆரம்ப கல்வி நிலையத்திற்கு மேல் செல்லாத குழந்தை விகிதம் 52 சதவிகிதமாக குறைத்தல்.
7 வடதுக்கு மேற்பட்ட கல்வி கற்கும் குழந்தை விகிதத்தை 85 சதவிகிதம் அதிகரித்தல்.
12.பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 2012 – 2017

           பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்குத் தேசிய வளர்ச்சிக்குழு இறுதி அங்கீகாரம் அளித்த நாள் டிசம்பர் 2012.
பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் பொருளாதார வளர்ச்சி:

மொத்த உள் நாட்டு வளர்ச்சி 8 சதவிகிதம்.
விவசாயத் துறை வளர்ச்சி 4 சதவிகிதம்
உற்பத்தி துறை வளர்ச்சி 7 சதவிகிதம்
தொழிற்சாலை வளர்ச்சி 7.6 சதவிகிதம்
சேவைத்துறை வளர்ச்சி 9.0 சதவிகிதம்
வறுமை மற்றும் வேலைவாய்ப்பு:

10 சதவிகிதம் வறுமையை ஒழித்தல்
50 மில்லியன் வேலைவாய்ப்பு உருவாக்குதல்
கல்வி:

2 மில்லியன் புதிய கல்வி இடத்தை உருவாக்குதல்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இஸ்லாம் மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தத்தைக் குறைத்தல்

Comments

Popular posts from this blog

Drama competition 2019

சதுரங்கப் போட்டி