நீல் ஆம்ஸ்டிராங் என்பவரைப்பற்றி உலகில் எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். ஏனென்றால், இவர்தான் முதன் முதலில் நிலவில் கால் வைத்தவர். ஆனால், முதன் முதலில் நிலவில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் என்று தெரியுமா?என்றால், இதற்கு விடை பல பேருக்கு தெரியாது. அவர் தான், எட்வின் சி. ஆல்ட்ரின். இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண் கலத்தின் பைலட். அதாவது விமானி. ஆல்ட்ரின், அமெரிக்காவின் விமானபடையில் பணி புரிந்தவர். மேலும் விண்நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்டிராங், அமெரிக்காவில் கப்பல் படையில் வேலை பார்த்தவர்., மிகுந்த தைரிய சாலி என்பதற்காகத்தான், அவர் இந்த பயணத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் கோ- பைலட் .,அதாவது, இணை விமானி. இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும், “நாசா”வில் இருந்து “ பைலட் பர்ஸ்ட்” என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கு மனதில் சின்ன தயக்கம்., இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல.,” நிலவில் முதன் முதலில் காலெடுத்து வைக்கிறோம்., புவிஈர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம்., கால் வைக