அச்சம் தவிர்

நீல் ஆம்ஸ்டிராங் என்பவரைப்பற்றி உலகில் எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். ஏனென்றால், இவர்தான் முதன் முதலில் நிலவில் கால் வைத்தவர். ஆனால், முதன் முதலில் நிலவில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் என்று தெரியுமா?என்றால், இதற்கு விடை பல பேருக்கு தெரியாது. அவர் தான், எட்வின் சி. ஆல்ட்ரின். இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண் கலத்தின் பைலட். அதாவது விமானி. ஆல்ட்ரின், அமெரிக்காவின் விமானபடையில் பணி புரிந்தவர். மேலும் விண்நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்டிராங், அமெரிக்காவில் கப்பல் படையில் வேலை பார்த்தவர்.,

மிகுந்த தைரிய சாலி என்பதற்காகத்தான், அவர் இந்த பயணத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் கோ- பைலட் .,அதாவது, இணை விமானி. இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும், “நாசா”வில் இருந்து “ பைலட் பர்ஸ்ட்” என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கு மனதில் சின்ன தயக்கம்., இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல.,” நிலவில் முதன் முதலில் காலெடுத்து வைக்கிறோம்., புவிஈர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம்., கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது., புதை மணலாக இருந்து உள்ளே இழுத்து விடுமோ.,

எரிமலையாக இருந்து காலை சுட்டு விடுமோ?” என்ற தயக்கத்தில் மணிக்கணக்கில் தாமதிக்க வில்லை., சில நொடிகள்தான் தாமதித்து இருப்பார்., அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது.,” கோ பைலட் நெக்ஸ்ட்”., நீல் ஆம்ஸ்டிராங், இந்த கட்டளை வந்த உடனேயே தயக்கம் இன்றி, பயமின்றி, துணிவுடன் காலடி எடுத்து வைத்தார்., உலக வரலாறு ஆனார். உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டு விட்டது. தகுதியும், திறமையும் இருந்தும் கூட, தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால், இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை. முதலாவது, வருபவரைதான், இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டும் அல்ல., தயக்கம்,. பயம் ஆகிய இவைகள், எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு, இதுவே ஒரு சிறந்த உதாரணம்.

இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்த சம்பவத்தை நினைத்துக்கொள்ளுங்கள். ஒரு நிமிட தயக்கம், நமது மிகப்பெரிய வெற்றியை தடுத்து விடுகிறது. நாம் எல்லோருமே, மிகப்பெரிய சாதனைகளை படைக்க வல்லவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் ஆகிய இவைதான் நமது முதல் எதிரி. பலருக்கு தன்னுடைய தவறுகளை களைவதில் தயக்கம்., அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்., தவறுகளை தட்டிக்கேட்பதில் தயக்கம்., சரியானதை செய்ய தயங்கினால், தவறானதைதான் நாம் செய்துகொண்டிருப்போம். எனவே, நல்ல விஷயங்களில் தயக்கத்தை தவிர்ப்போம்.

இந்த அச்சம், வரலாறையே மாற்றி விட்டது. எனவே அச்சம்தானே. என்று ஒருவரும் சாதாரணமாக இதனை எண்ணி விடாதீர்கள். உங்களில் யாராவது, இம்மாதிரியான தயக்கம், பயம் போன்றவற்றுக்கு அடிமைகளாக இருப்பீர்களானால், உடனே, அதை உங்களிடம் இருந்து தூக்கி எறிந்து விடுங்கள். ஏனென்றால், அது உங்களுக்கு என்று வைத்திருக்கும் நல்ல எதிர்கால வாழ்க்கையையே மாற்றிவிடும். எனவே, அச்சம் தவிர்., துணிவு கொள்., வெற்றி நடை போடு வாலிபனே!!!.

 

Comments

Popular posts from this blog

Drama competition 2019

சதுரங்கப் போட்டி