பாரதியார்
எம் கவிஞன் பாரதியாருக்கு
சமர்ப்பணம் ...
கதிரவனின் கைப்பட்டால் மலருக்கு வாழ்வு_உன்
கவிதையின் சொல்பட்டால் மனிதனுக்கு எங்கு தாழ்வு!
பாரதி நீ எங்கள் தமிழின் தங்கம் !
அதை சொல்வதினால் பெரும் இன்பம்!
உன் கையில் இருந்து
சிதறிய முத்துக்களால்
ஜொலிக்கிறது எங்களின் முகம்....
தனிமையிலும் தாலாட்டுப் பாடி
உறங்க வைக்கும்
உனது படைப்புகள் .....
நரைமுடி படர்ந்தாலும்-உன்
கவிமுடி படராது!
கைப்பேசி காதல் பேசும் காலத்திலும்
உன் கவிதைகளும் பேசும் காதல்!
நீ காண நினைத்த
புதுமை பெண்கள்
சிறையிலிருந்து மீண்டு எழுந்து
சிறகுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்....
அடிமை சூத்திரத்தில்
அகப்பட்டிருந்த நாங்கள்- இன்று
உன் கவிமை சுதந்திரத்தனால்
புறப்பட்டுருக்கிறோம்!
எட்டயப் புறத்தில் பிறந்ததினால் என்னவோ- இன்று
யாரும் எட்டாத தூரத்தில் நிற்கிறாய்!
விடுகதையாய் திகழ்ந்த எங்களின் வாழ்வு
இன்று உன்னால்
விடுதலையாய் மாறிவிட்டது.....
உன் பரணி உள்ள வரைக்கும்
எங்களின் தரணி என்றும் வாழும்!
By
K.Monisha BA...B.Ed....,
Comments
Post a Comment